Published : 20 Sep 2024 06:31 AM
Last Updated : 20 Sep 2024 06:31 AM

6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு இன்று(செப்.20) தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இந்த வகுப்புகளுக்கான தேர்வு செப். 27-ல் முடிவடையும். அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு இன்று முதல்செப். 27 வரை நடைபெற உள்ளது.இதையடுத்து செப். 28 முதல்அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x