Published : 30 Aug 2024 06:41 AM
Last Updated : 30 Aug 2024 06:41 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இன்று இறுதி ஒதுக்கீடு

கோப்புப் படம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த 21-ம்தேதி தொடங்கியது. அரசுஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியாக பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் இன்றுஇணையதளத்தில் வெளியிடப்படுகிறது. செப். 5 பகல் 12 மணிவரை ஒதுக்கீட்டு ஆணையைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செப்.5 மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x