Published : 15 Aug 2024 04:25 AM
Last Updated : 15 Aug 2024 04:25 AM

தபால்தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல்துறை கல்வி உதவி தொகை

சென்னை: மத்திய அரசின் ‘தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா’ திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, இந்தாண்டு தமிழகத்தில் இருந்து 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் செப். 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து தகவல்கள், விண்ணப்பங்களை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-2854 3199 என்ற தொலைபேசி எண்ணிலும், annaroadho@indiapost.gov.in என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x