Published : 23 Jul 2024 06:02 AM
Last Updated : 23 Jul 2024 06:02 AM

ஆக.4-ல் நடக்க இருந்த உதவி பேராசிரியர் தேர்வு தள்ளிவைப்பு

கோப்புப் படம்

சென்னை: ஆகஸ்ட் 4-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்க இருந்த போட்டி தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x