Last Updated : 19 Jun, 2024 11:40 PM

 

Published : 19 Jun 2024 11:40 PM
Last Updated : 19 Jun 2024 11:40 PM

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: ஹால்டிக்கெட் ஜூன் 24-ல் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 24-ம் தேதி வெளியிடுகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: “பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உட்பட) ஹால்டிக்கெட் ஜூன் 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதுதவிர அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன் 25, 26-ம் தேதிகளில் தங்களுக்கு பயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுக வேண்டும். அதேபோல், ஹால்டிக்கெட் இல்லாத தேர்வர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். மேலும், துணைத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x