Last Updated : 11 Jun, 2024 08:04 PM

 

Published : 11 Jun 2024 08:04 PM
Last Updated : 11 Jun 2024 08:04 PM

மதுரை காமராஜர் பல்கலை. தேர்வாணையர் ராஜினாமா

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையராக (பொறுப்பு ) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தர்மராஜ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பல்கலைக்கழக பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரான தர்மராஜ், கடந்த 2020 நவம்பரில் கூடுதல் பொறுப்பாக தேர்வாணையராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளை தாண்டியும் அவர், அந்த பொறுப்பில் நீடித்தார். இருப்பினும், அவருக்கு எதிராக சில சர்ச்சைகளும் எழுந்த நிலையில், தேர்வாணையர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவெடுத்தார்.

மேலும், அவர் சிண்டிகேட் உறுப்பினராகவும் தேர்வு பெற்றதால் , ஒரே நபர் இரு பொறுப்புகளில் நீடிக்க முடியாத சூழலில் தனது ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இது பரிசீலனையில் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x