Published : 17 Nov 2023 06:13 AM
Last Updated : 17 Nov 2023 06:13 AM

சென்னையில் நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நாளை (நவ.18) தமிழக அரசின் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நவ.18-ம் தேதி (நாளை) மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x