Published : 25 May 2023 06:46 AM
Last Updated : 25 May 2023 06:46 AM

தூத்துக்குடி | வடைக்கு சட்னி தராததால் கடைக்காரருக்கு வெட்டு

தூத்துக்குடி: வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3-வது மைல் சங்கர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மதுரை புறவழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2-வது மகன் உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வடை வாங்கியுள்ளனர். வடைக்கு சட்னி தருமாறு கேட்டுள்ளனர்.

சட்னி இல்லை என்று கூறியதால், 3 பேரும் உதயசங்கரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x