Published : 03 May 2023 04:03 AM
Last Updated : 03 May 2023 04:03 AM

கோவையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: தாயின் இரண்டாவது கணவர் கைது

கோவை: கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் மாணவியின் தாய், பெயிண்டர் நியாசுதீன் (41) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தாய் வெளியே சென்ற நேரங்களில் நியாசுதீன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவம் குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

ஆனாலும் தாயிடம் இதுபற்றி மாணவி கூறியுள்ளார். இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீஸார், நியாசுதீனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x