Published : 10 Mar 2023 06:06 AM
Last Updated : 10 Mar 2023 06:06 AM

தி.மலை | சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தி.மலை: வந்தவாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம், திருப்பூக்குழி கிராமத்தில் வசிப்பவர் ரவி மகன் ஜெயசூர்யா. இவர், வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு கடந்த 12-04-2017-ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டன. இதில், ஜெயசூர்யாவுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x