Published : 04 Mar 2023 04:36 AM
Last Updated : 04 Mar 2023 04:36 AM

வாட்ஸ்-அப் அட்மின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேர் கைது

குர்கான்: ஹரியாணா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டோடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். தனது செல்போனில் வாட்ஸ்-அப் குழு உருவாக்கிய ராஜ்கமல், அதில், 100-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்க்கும் நபர்களைச் சேர்த்தார். இதில், டென்னிஸ் பயிற்சியாளர் ஆனந்த்குமாரின் நாய் இறந்தது தொடர்பாக குழுவில் விவாதம் நடைபெற்றுள்ளது.

இதனால் 3 பேரையும் குழுவிலிருந்து நீக்கிவிட்டார் ராஜ்கமல். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த குமார் உட்பட 3 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்கமலை தாக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ராஜ்கமல் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x