ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் மரணம்: கொலை வழக்கில் இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் மரணம்: கொலை வழக்கில் இருவர் கைது
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த சேதுராஜா(18) என்பவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சேதுராஜா(18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சேதுராஜா கூலி வேலை செய்து வந்தார். சேதுராஜா பொங்கல் அன்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை வாலாங்குளம் கண்மாயில் சேதுராஜா இறந்து கிடந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீஸ் விசாரணையில் சேதுராஜாவும் அவரது உறவினர் கார்த்திக் என்பவரும் வாலாங்குளம் கண்மாய் கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது கார்த்திக் சகோதரர்களான கருப்பசாமி(23), வீரமணி(27) ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் சேதுராஜாவிடம் கார்த்திக்கை கெடுப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கியதில் சேதுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை கண்மாய் நீரில் போட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தனர். இதையெடுத்து சேதுராஜா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கருப்பசாமி, வீரமணி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in