Published : 24 Apr 2022 04:15 AM
Last Updated : 24 Apr 2022 04:15 AM
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருப்பஞ்சாவடியைச் சேர்ந்தவர் செல்வம்(28). விவசாயியான இவர், டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், மகள் முறைக் கொண்ட 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதற்கு, அவரது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அச்சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி எம்.எழிலரசி நேற்று இவ்வழக்கில், செல்வத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். என தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தி.கலாசெல்வி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment