அரியலூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

அரியலூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published on

அரியலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தா(28), கீழப்பழுவூர் சந்திரா(30), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சை வினோத்(29), வி.கைகாட்டி பிரேம்(29), பாலச்சந்திரன்(27), செந்துறை தனவேல் (45) ஆகிய 6 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கீழப்பழுவூர் ராஜேந்திரன்(62), வெற்றிச்செல்வன்(37), திருமானூர் தெய்வீகன்(44) என மேலும் 3 பேரை போலீஸார் தேடிவந்த நிலையில், அன்றிரவே அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in