Published : 26 Feb 2022 12:18 PM
Last Updated : 26 Feb 2022 12:18 PM

மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் இளைஞர், மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு

மதுரை

மதுரை கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (45). அப்பகுதியி லுள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமங்கலம் நகர் போலீஸார் விசா ரிக்கின்றனர்.

மேலூர் அருகிலுள்ள மேலவளவைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு (82). இவர் நேற்று காலை தனது வயலுக்கு நடந்து சென்றார். தும்பைப்பட்டி விலக்கு அருகே அவ்வழியாக சென்ற பைக் மோதியதில் அம்மாகண்ணு உயிரிழந்தார். மேலவளவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஆவியூரைச் சேர்ந்தவர் சேதுராமன் (29). பிப். 20-ம்தேதி மதுரை-அருப்புக்கோட்டை 4 வழிச் சாலையில் தனது பைக்கில் சென்றார். ஜெயவிலாஸ் தோட்டம் அருகே அவரது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x