Published : 18 Mar 2025 04:06 PM
Last Updated : 18 Mar 2025 04:06 PM

தாம்பரத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்: தட்டி கேட்டால் அடி, உதை - நடப்பது என்ன?

கிழக்கு தாம்​பரம் சேலை​யூரில் ஒரு நம்​பர் லாட்​டரி விற்​பனை கூலி தொழிலா​ளி​களை குறி​வைத்து அமோக​மாக நடை​பெறுகிறது. இதைத் தட்டி கேட்​டால் தாக்​குதல் சம்​பவங்​கள் அரங்​கேற்​றப்​படு​கிறது. தமிழகத்​தில் லாட்​டரி சீட்​டு​களால் குடும்​பங்​கள் பாதிக்​கப்​பட்டு பலர் தற்​கொலை வரை சென்​ற​தால் லாட்​டரி விற்​பனைக்கு அரசு தடை விதித்​துள்​ளது.

ஆனால் கிழக்கு தாம்​பரம் சேலை​யூர் மற்​றும் சுற்​றுப்​பகு​தி​களில் நம்​பர் லாட்​டரி விற்​பனை அமோக​மாக நடப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. கிழக்கு தாம்​பரம், காந்தி நகர் பூங்​கா, சேலை​யூர், காம​ராஜபுரம் பேருந்து நிறுத்​தம், வேங்​கை​வாசல், சேலை​யூர், மாடம்​பாக்​கம் காவல் நிலை​யம் பின்​புறம் என பல்​வேறு பகு​தி​களில் லாட்​டரி கும்​பல் ரகசி​ய​மாக, திறந்​தவெளி​யில் விற்​பனை செய்து வரு​கிறது.

இம்​முறை​யில் கேரளா, சிக்​கிம் உள்​ளிட்ட பல்​வேறு மாநில லாட்​டரி​களின் ஆன்​லைன் குலுக்​கல் நேரத்​துக்கு ஏற்ப இக்​கும்​பல் துண்டு சீட்​டில் நம்​பர் எழுதி வழங்​கு​கிறது. ஒரு லட்​சம் பரிசுக்கு ரூ.50, கூடு​தல் பரிசுக்கு ஏற்ப, 120, 360, ஆயிரம் ரூபாய் என்​றும், அதற்கு ஆங்​கில எழுத்து வரிசை​யுடன் எண்​களை எழுதி விற்​பனை செய்​கின்​றனர்.

குறிப்​பிட்ட நேரத்​தில் அந்த பெயருடைய லாட்​டரி குலுக்​கல் முடிந்​து, முடிவு​கள் ஆன்​லைன் வாயி​லாக வெளி​யிடப்​படும். அந்த முடிவு​களின் அடிப்​படை​யில் பரிசுகள் வழங்​கப்​படு​கிறது. சிறிய அளவி​லான பரிசுகளை மட்​டும் வழங்​கும் அக்​கும்​பல், பெரிய அளவில் பரிசுகள் விழுந்​தால் பரிசுகளை கொடுக்​காமல் ஏமாற்​றும் வகை​யில் கேட்​பவர்​களை அடித்து விரட்​டும் சம்​பவங்​களும் நடந்து வரு​கின்​றன.

அதே​போல் வாட்​ஸ்​அப் வாயி​லாக லாட்​டரி வாங்​கும் நபர்​கள் போட்டி சீரியல் எண்​களை வாட்​ஸ்​அப் வழி​யாக பெற்​று, தங்​களுக்கு ராசி​யான எண்ணை எழுதி தந்​தால் அதனை மொபைலில் போட்டோ எடுத்​துக்​கொண்டு பணத்தை பெற்​றுக் கொள்​கின்​றனர். பல லட்​சம் ரூபாய் பரிசு விழும்; வாழ்க்கை மாறி​விடும் என்ற நம்​பிக்​கை​யில் தொழிலா​ளர்​கள், ஏழை குடும்​பங்​களை சேர்ந்த பலர் இந்த சட்​ட​விரோத​மான லாட்​டரி​களை வாங்​கு​கின்​றனர். இதனால் பல குடும்​பங்​கள் வாழ​வழி​யின்றி லாட்​டரி மோசடி​யால் பாதித்து வரு​வதோடு, ஏமாற்​றத்​தால் தற்​கொலை செய்து கொள்​ளும் சம்​பவங்​களும் நடந்து வரு​கின்​றன.

சேலை​யூர் காவல் நிலைய எல்​லை​யில் மட்​டும் நம்​பர் லாட்​டரி மோசடி​யில் தின​மும், 10 லட்​சம் ரூபாய் வரை வர்த்​தகம் நடப்​ப​தாக கூறப்​படு​கிறது. இதை யாரேனும் தட்டி கேட்​டால் அவர்​களை தாக்​கு​வதும் நடந்து வரு​கிறது. இதனால் யாரும் காவல் துறை​யினரை அணுகு​வ​தில்​லை. அப்​படி அணுகி​னாலும் அதுகுறித்த தகவல் லாட்​டரி கும்​பலுக்கு தெரி​விடு​கிறது. இதனால் புகார் செய்​பவர்​களை தாக்​கும் சம்​பவங்​களும் நடந்து வரு​கின்​றன. இதனால் சட்​ட​விரோத லாட்​டரி விற்​பனை குறித்து யாரும் புகார் சொல்ல முன்​வரு​வ​தில்​லை. இதனால், தாம்​பரம் சுற்​றுப்​பகு​தி​களில் தடை செய்​யப்​பட்ட லாட்​டரி சீட்டு விற்​பனை களை​கட்டி வரு​கிறது.

இதுகுறித்து சமூக செயற்​பாட்​டாளர் சண்​முகம் கூறியது: தமிழ்​நாட்​டில் 2003-ம் ஆண்டே லாட்​டரி சீட்டு விற்​பனைக்கு தடை விதிக்​கப்​பட்​டு​விட்ட போதி​லும், நம்​பர் லாட்​டரி சூதாட்​டம் விற்​பனை இன்​றள​வும் தொடர்​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் வந்த வண்​ணம் உள்​ளன. அந்த வரிசை​யில், சேலை​யூர் காவல் எல்லை பகு​தி​களில் நம்​பர் லாட்​டரி சூதாட்​டம் நடப்​ப​தாக அடுத்​தடுத்து புகார்​கள் வரு​கின்​றன.

அதுகுறித்து நேரடி​யாக தெரிந்து கொள்ள பல இடங்​களில் ஆய்வு மேற்​கொண்​டேன். அவை அனைத்​தும் உண்மை என தெரிந்​தது. தடை செய்​யப்​பட்ட லாட்​டரி விற்​பனை குறித்து போலீ​ஸாருக்கு தெரி​வித்​தேன். பிறகு தூரத்​தில் இருந்து வேடிக்கை பார்த்​தேன். அங்​கிருப்​பவர்​களுக்கு போன் வந்​தது. உடனே இடத்தை காலி செய்​து​விட்​டனர். இதனால் போலீ​ஸாருக்கு தெரிந்​தே​தான் இது நடை​பெறுகிறதா என்ற சந்​தேகம் எழுகிறது.

தாம்​பரம் சுற்​று​வட்​டாரங்​களில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெகு விமரிசை​யாக நடக்​கிறது. தட்டி கேட்​டால் தாக்​குதல் சம்​பவங்​களும் நடக்​கிறது. இதில் என் நண்​பர் பாதிக்​கப்​பட்​டார். இந்த நம்​பர் லாட்​டரி சூதாட்​டத்​தில் தாங்​கள் உழைத்த பணத்தை இழந்து ஆயிரக்​கணக்​கானோர் தவித்து வரும் நிலை​யில், இதனை முற்​றி​லும் ஒழிக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்​டும். காவல் உயர் அதி​காரி​கள் இதில் நேரடி​யாக தலை​யிட வேண்​டும் என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x