Published : 26 Feb 2025 06:33 AM
Last Updated : 26 Feb 2025 06:33 AM

திரு​வள்​ளூர் | நிலம் வாங்​கி தருவதாக ரூ.1.19 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

திரு​வள்​ளூர்: பூந்​தமல்​லியை அடுத்த காட்டு​பாக்​கத்​தைச் சேர்ந்த சிவக்​கு​மார் என்பவர் வெளி​நாட்​டில் வேலை பார்த்து சம்பா​தித்த பணத்​தைக் கொண்டு, சென்னை​யில் நிலம் வாங்க வேண்டி வானகரம், மேட்டுக் குப்​பத்​தைச் சேர்ந்த வாசு என்பவரை அணுகி உள்ளார். சிவக்​கு​மாருக்கு நிலம் வாங்​குவது பற்றிய முன் அனுபவம் இல்லாததை தெரிந்து கொண்டு அவரை ஏமாற்ற வாசு நினைத்​தார்.

இதன்​படி, வாசு தனக்கு தெரிந்த நபரை சிவக்​கு​மாரிடம் தனது அக்கா என கூறி அவரிடம் திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி நகராட்சி, 21-வது வார்​டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 50 சென்ட் நிலம் இருப்​ப​தாக கூறி, ஒரு சென்ட் ரூ.11 ஆயிரம் என்ற அடிப்​படை​யில், அந்நிலத்​துக்கு ரூ.5.5 லட்சம் என நிர்​ணயம் செய்து, அதனை வாங்கி விற்​றால் நல்ல லாபம் கிடைக்​கும் என கூறி உள்ளார்.

இதை நம்பிய சிவக்​கு​மார், வாசு சொன்ன நபருக்கு ரூ.10 லட்ச​மும், வாசுவுக்கு ரொக்​கமாக ரூ.5 லட்ச​மும் பணம் கொடுத்​துள்ளார். ஆனால், பணத்தை பெற்ற வாசு மேற்படி நிலத்தை சிவக்​கு​மார் பெயரில் பதிவு செய்​யாமல் கிரைய ஒப்பந்த உடன்​படிக்கையே போட்​டுள்​ளார். மேலும், வாசு தனது மகன் பிரேம்​கு​மாரை புரோக்கர் என சிவக்​கு​மாருக்கு அறிமுகம் செய்து வைத்து அவருக்கு ரூ.10.60 லட்சத்தை வாசு, சிவக்​கு​மாரிடம் இருந்து வாங்​கிக் கொடுத்​துள்ளார்.

பின்னர், கோயம்​பேட்​டில் 51 சென்ட் மனை இருப்​ப​தாக​வும், முன்​பணம் கொடுத்து கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொள்​ளலாம் என்றும், அந்த இடத்தை நாம் வாங்கி விற்​றால் பெரிய அளவில் லாபம் கிடைக்​கும் எனவும் சிவக்​கு​மாரிடம், வாசு கூறி உள்ளார். இதை நம்பிய சிவக்​கு​மார் மேற்​கண்ட இடத்​தின் உரிமை​யாளர்கள் கிளாடி, கிளாடி​யின் கணவர் அண்ணாதுரை, பவர் ஏஜென்ட் ராஜன் மற்றும் இடைத்​தரகர் தெய்​வ​மலர் ஆகியோர் சேர்ந்து இடத்​தின் விலை ரூ.5.75 கோடி என நிர்​ணயம் செய்து ஒப்பந்தம் செய்​துள்ளனர்.

அதன்​படி, முன்​பணமாக ரூ.20 லட்சத்​தில் ரூ.10 லட்சத்தை அண்ணா துரைக்​கும் ரூ.10 லட்சத்தை ராஜனுக்​கும், தெய்​வ​மலருக்கு ரூ.12 லட்ச​மும் சிவக்​கு​மார் கொடுத்​துள்ளார். மேலும், மேற்​கண்ட இடத்​துக்கு பட்டா வாங்க பணம் தேவைப்​படு​வதாக சொல்லி வாசு, சிவக்​கு​மாரிடம் ரூ.50,000 பெற்றுள்​ளார்.

பின்னர், சிவக்​கு​மார் கோயம்​பேட்​டிலுள்ள மேற்​கண்ட இடத்தை விற்க சென்​ற​போது அந்த இடம் அரசுக்கு சொந்​தமான புறம்​போக்கு நிலம் என்றும் அதற்கு பட்டா வாங்க இயலாது என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை, சிவக்​கு​மார், வாசு, அவர் சொன்ன நபர்​களுக்கு, ரூ.1.19 கோடி பணத்தை கொடுத்​துள்ளார்.

இதுகுறித்து, சிவக்​கு​மார், அளித்த புகாரின் பேரில் சென்னை, வானகரம், மேட்டுக்​குப்​பம், ​திரு​வள்​ளுர் தெருவை சேர்ந்த வாசு, மகன் பிரேம்​ கு​மார், நெற்​குன்​றம், நியூ ​காலனி, பெரு​மாள் கோ​யில் 3-வது தெருவை சேர்ந்த அண்ணாதுரை, ​கொரட்​டூர், சாந்தி நகரை சேர்ந்த தெய்​வ​மலர்​ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x