Last Updated : 26 Oct, 2024 03:17 PM

 

Published : 26 Oct 2024 03:17 PM
Last Updated : 26 Oct 2024 03:17 PM

ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் வயலுக்குச் சென்றுகொண்டிருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேலு (61). இவர் இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாய பணிக்காக தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ராமநாதபுரம் - மதுரை பயணிகள் ரயில் வேகமாகச் சென்றது. அதிலிருந்து இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று விவசாயி சண்முகவேலின் முகத்தில் அடித்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ராமேசுவரம் ரயில்வே போலீஸார் சண்முகவேல் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவுப் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் நிற்காமல் சென்றுவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x