Published : 04 Oct 2024 06:27 AM
Last Updated : 04 Oct 2024 06:27 AM

அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்றுமாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தர்மா என்பவர் வலை வீசியுள்ளார். அப்போது வலைக்குள் 2 சிறுவர்களின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்த அவர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அரகண்டநல்லூர் போலீஸார் அங்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களை மீட்டு, விசாரணை நடத்தினர். அவர்கள் மனம்பூண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் ஜீவிதன்(10), தர்ஷன்(8) என்பது தெரியவந்தது. தகவலறிந்தது வந்த உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், தங்களது மகன்களுடன் மேலும் ஒரு சிறுவனும் விளையாட வந்ததாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் ஏரிக்குள் தேடினர். அப்போது, மனம்பூண்டியைச் சேர்ந்ததரன் மகன் ஹரிஹரன்(11) என்ற சிறுவனின் உடல் கிடைத்தது. தொடர்ந்து, 3 சிறுவர்களின் உடல்களையும் பிரேதப்பரிசோதனைக்காக விழுப்புரம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வழக்கமாக காலையில் விளையாடச் செல்லும் தங்களது பிள்ளைகள் மாலையில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என கருதியிருந்த பெற்றோருக்கு, ஏரியில் மூழ்கி அவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x