Published : 01 Oct 2024 05:57 AM
Last Updated : 01 Oct 2024 05:57 AM

திரிபுராவில் 62 வயது மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்து எரித்து கொன்ற மகன்கள்

அகர்தலா: மேற்கு திரிபுராவின் சம்பக்நகர் காவல் எல்லைக்குட்பட்ட கமர்பாரி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெண் ஒருவர்மரத்தில் கட்டப்பட்டு உயிருடன் தீவைக்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார் பெண்ணின் உடலைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது 2 மகன்களை கைது செய்தனர். 62 வயதான அந்த மூதாட்டி, தனது கணவர் இறந்த பிறகு தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு குடும்பத் தகராறு காரணமாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x