Last Updated : 07 Sep, 2024 10:30 PM

 

Published : 07 Sep 2024 10:30 PM
Last Updated : 07 Sep 2024 10:30 PM

தண்டனை பெண் கைதி மரணம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

செங்குன்றம்: புழல் சிறையில் இருந்து வந்த பெண் தண்டனை கைதி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை- சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் மாரியம்மாள் என்கிற சாயிராபானு (64). இவர் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த ஆண்டு மே 19-ம் தேதி முதல் சென்னை புழல் சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், சாயிரா பானு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 14 -ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழலில் அங்கு நேற்று இரவு சாயிரா பானு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x