Last Updated : 02 Sep, 2024 02:11 PM

 

Published : 02 Sep 2024 02:11 PM
Last Updated : 02 Sep 2024 02:11 PM

ராயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தற்கொலைக்கு முயற்சி

சென்னை: ராயபுரம் காவல் நிலையத்தில் கண்ணாடியை உடைத்து கழுத்தில் கிழித்துக்கொண்டு விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞரை, கல்லூரி மாணவி ஒருவரை பின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அந்த நபர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து கழுத்தில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை கைதி ஒருவர் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x