Last Updated : 22 Aug, 2024 10:00 AM

 

Published : 22 Aug 2024 10:00 AM
Last Updated : 22 Aug 2024 10:00 AM

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பைக்கில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த நத்தம் போலீஸார் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x