புதுச்சேரியில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட தங்கும் விடுதியில் விசாரணை நடத்திய புதுச்சேரி போலீஸார். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட தங்கும் விடுதியில் விசாரணை நடத்திய புதுச்சேரி போலீஸார். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷமருந்தி தற்கொலை

Published on

புதுச்சேரி: திண்டுக்கல் வடக்கு ரத வீதி கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(60). வீட்டிலேயே தங்க நகை செய்யும் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சரஸ்வதி (55), மகன் சுந்தரேசன் (25), மகள் சவுந்தர்யா (22).

இவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். புதுச்சேரி முத்து மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில், 4 பேரும் விடுதி அறையில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது நேற்று பிற்பகல் தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து புதுச்சேரி பெரியகடை போலீஸார் வழக்குபதிவு செய்து, அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்றுவிசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in