Published : 26 Jul 2024 06:07 AM
Last Updated : 26 Jul 2024 06:07 AM

சென்னை | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழக்கறிஞர் சிவா

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவர், போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மணலி மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா (35) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதான சிவா, பிரபல ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தவர்.

பணப் பட்டுவாடாவிலும் ஈடுபட்டிருக்கிறார் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதில் 5 பேர் வழக்கறிஞர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x