Last Updated : 24 Jul, 2024 12:07 PM

 

Published : 24 Jul 2024 12:07 PM
Last Updated : 24 Jul 2024 12:07 PM

ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பிரதிநித்துவப் படம்

திருவள்ளூர்: ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்( 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் ராணுவ வீரர். ஆவடி விமானப் படைத் தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், காளிதாஸ் கடந்த இரண்டு நாட்களாக, ஆவடி விமானப் படை தளத்தின் 8-ம் எண் கொண்ட கோபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இச்சூழலில், காளிதாஸ் இன்று அதிகாலை 3.55 மணியளவில் பணியில் இருந்த போது, அவர் பயன்படுத்தி வந்த ‘ஏகே 47’ ரக துப்பாக்கியால், தொண்டையில் தனக்குத் தானே சுட்டுக் கொண்டார். இதில், 3 தோட்டக்கள் அவரது தொண்டையில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்த ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், காளிதாஸ் பணிச் சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா ஆல்லது குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x