Published : 18 Jul 2024 09:12 AM
Last Updated : 18 Jul 2024 09:12 AM

போதை மாத்திரை விற்ற துணை நடிகர்கள் உட்பட 5 பேர் கைது

கோவை: கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸார், சுங்கம்-உக்கடம் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த யாசிக் இலாஹி(26), போளுவாம்பட்டி மரியா(31), கரும்புக்கடை முஜிப் ரகுமான்(27), ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணன்(24), சென்னை சினேகா(31) ஆகியோர், கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ஒரு வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர்களில் யாசிக் இலாஹி, மரியா, சினேகா ஆகியோர் திரைத் துறையில் துணை நடிகர்களாக உள்ளனர். மேலும், அப்துல்கலாம், ஆஷிக் ஷெரீப், ரிஸ்வான், சச்சின் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x