Last Updated : 10 Jul, 2024 08:00 PM

 

Published : 10 Jul 2024 08:00 PM
Last Updated : 10 Jul 2024 08:00 PM

ரயில் இன்ஜின் மோதி 2 வடமாநில இளைஞர்கள் உயிரிழப்பு: மதுரை அருகே பரிதாபம்

மதுரை: மதுரை அருகே ரயில் இன்ஜின் மோதி, கட்டுமானப் பணிக்கு வந்த 2 வடமாநில இளைஞர்கள் இன்று உயிரிந்தனர்.

மதுரை ஐராவதநல்லூர் அருகிலுள்ள கல்லம்பல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கட்டுமான பணி நடக்கிறது. இப்பள்ளியில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில், இவர்கள் இன்று வார விடுமுறையில் இருந்துள்ளனர். இவர்களில் கவுரவ் (24), மசூதன் (22) ஆகிய இருவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு அருகிலுள்ள கல்லம்பல் மேம்பால பகுதிக்கு சென்றனர்.

மாலை 4 மணியளவில் அவர்கள் மேம்பாலத்தின் அடியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்கென சென்ற ரயில் இன்ஜின் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் இது குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே காவல் ஆய்வாளர் ஜெயப்பிரிதா, எஸ்ஐ-யான கேசவன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பலியான இளைஞர்களின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x