Published : 06 Feb 2024 06:05 AM
Last Updated : 06 Feb 2024 06:05 AM

சென்னை | 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் கைது

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மதுபோதையில் இருந்த கும்பல் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை மிரட்டினர்: சென்னை சேத்துப்பட்டு, பிருந்தாவன்நகர் 2, 3 மற்றும் 4-வது தெருக்களில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மது போதையில் இளைஞர்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடி களை கைகளில் வைத்திருந்த ஆயுதங் களால் அடித்து சேதப்படுத்தினர்.

மேலும், வீடுகளின் ஜன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்துவதை அறிந்து வீடுகளி லிருந்து வெளியே வந்த பொதுமக்களை ஆயுதங்களை காட்டி அந்த இளைஞர்கள் மிரட்டினர்.

தகவல் அறிந்து கோட்டூர்புரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த குகன் (19), அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் ராஜ் (20) ஆகிய இருவரும் கைது செய் யப்பட்டனர்.

முன்விரோதம் காரணமா? - சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x