Published : 24 Jan 2024 04:10 AM
Last Updated : 24 Jan 2024 04:10 AM

பல்வேறு வழக்குகளில் சிக்கிய மதுரை ரவுடி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரையில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய ரவுடி, விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகிலுள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ஜோதி மணி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இருந்தார். சிறையில் இருந்த ஜோதி மணி கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இத்தனை வழக்குகளில் இருந்து எப்படி விடுதலை பெறுவது, என மகனைப் பார்த்து மாரிமுத்து புலம்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கீழவடக்கூர் பாலம் அருகே ஜோதிமணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சிலைமான் போலீஸார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x