Published : 17 Jan 2024 06:15 AM
Last Updated : 17 Jan 2024 06:15 AM

சென்னை | 20 ஆண்டுக்கு பிறகு பழிக்குப்பழி: ரவுடி மாதவன் கொலை வழக்கில் 6 பேர் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரவுடி ஆற்காடு சுரேஷ்வெட்டி கொலை செய்யப்பட்டபோது, இவர் மீதும்வெட்டுக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டை பகுதியில் மாதவன் தனதுநண்பர்களுடன் இருந்தபோது, 4 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஐஸ்-அவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கிருஷ்ணன் (50),சதீஷ் என்கிற பில்லா சதீஷ்(30), பாக்சர் முரளி(27), விக்னேஷ்(27), சரத்பாபு(30), பிரகாஷ் என்கிற முகேஷ்(24) ஆகியோரை திருவண்ணாமலை பகுதியில் போலீ ஸார் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாதவன், ஆலிசுரேஷ் மற்றும் நண்பர்க ளுடன் சேர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ் ணன் என்பவரை கடந்த 2001-ல் கொலை செய்ய முயன்றுள்ளார்.

முன்விரோதம்: இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கிருஷ்ணனின் மகன்களான பில்லா சதீஷ் மற்றும் பாக்சர் முரளி ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து ஆலிசுரேஷை கடந்த 2022-ல் புளியந்தோப்பு பகுதியில் வைத்து கொலை செய்ததுடன், தற்போது மாதவனை யும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். இவர்களில் கிருஷ் ணன், பாக்ஸர் முரளி, பில்லா சதீஷ், சரத்பாபு ஆகியோர் ஏற்கெனவே சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x