Published : 09 Oct 2023 05:52 AM
Last Updated : 09 Oct 2023 05:52 AM

விமான நிலையத்தில் ரூ. 1.69 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னை சாதிக்அலி(40), அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் காலணிகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மற்றொரு விமானத்தில் வந்த புதுக்கோட்டை செங்குட்டுவன் (37) கடத்தி வந்த ரூ.61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோதங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x