Published : 02 Oct 2023 04:04 AM
Last Updated : 02 Oct 2023 04:04 AM

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாராயணசாமி, திடீரென நாட்டுவெடி குண்டை வீசி விட்டு தப்பியோடியுள்ளார். இதில் அந்த நாட்டு வெடி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்களில் பரணிதரன் என்பவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த பரணிதரனை மீட்டு, சிகிச் சைக்காக முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்து விழுப்புரம் தாலுகா போலீஸார், கண்டம்பாக்கம் ரயில் நிலை யத்துக்கு சென்று, வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு துகள்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய நாராயணசாமியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x