Published : 12 Sep 2023 06:12 AM
Last Updated : 12 Sep 2023 06:12 AM

சென்னை | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த தம்பதி, தங்களது 5 வயது மகள் மற்றும் மகனுடன் கடந்த 2021 செப்.11-ம் தேதி இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அடையார் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, கார்த்திக் (25)என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசுதரப்பில் வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x