Published : 08 Oct 2022 10:03 AM
Last Updated : 08 Oct 2022 10:03 AM

பொன்னியின் செல்வன் முதல் வார வசூல் ரூ.325 கோடி

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, திரைப்படமாக இயக்கி இருக்கிறார், மணிரத்னம். முதல் பாகம், தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த 30-ம் தேதி வெளியானது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.325 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. இதனால், இதன் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கான வேலைகளை படக்குழுத் தொடங்கி இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x