Published : 01 Jun 2022 02:09 PM
Last Updated : 01 Jun 2022 02:09 PM

புகழஞ்சலி: கேகே | “கணிக்க முடியாத வாழ்வு... உங்களை மிஸ் செய்கிறோம்” - யுவன் சங்கர் ராஜா

"அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே'' என்று பாடகர் கேகே மறைவையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருக்கமாக புழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே... நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே'' என்று தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்றிரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாசார விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிக்க > இவற்றைப் பாடியது நீங்கள்தானா? - கேகே... உங்களைக் கொண்டாட மறந்ததற்கு மன்னியுங்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x