Published : 09 Jun 2015 02:24 PM
Last Updated : 09 Jun 2015 02:24 PM
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வந்த 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கியது. இப்படத்தில் வில்லனாக நடித்தார் பார்த்திபன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே பாண்டிச்சேரியில் படமாக்கி இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய 'நானும் ரவுடிதான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 7) முடிவுற்றது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT