Last Updated : 01 Jun, 2015 11:12 AM

 

Published : 01 Jun 2015 11:12 AM
Last Updated : 01 Jun 2015 11:12 AM

ராஜதந்திரம் அமித் இயக்கத்தில் விக்ரம்?

சமீபத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராஜதந்திரம்' படத்தின் இயக்குநர் அமித் இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக விக்ரம் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அப்படப்பிடிப்பு முடிந்து அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அப்படத்தைத் தொடர்ந்து 'அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். விரைவில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படங்களைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் விக்ரம். அதில் 'ராஜதந்திரம்' இயக்குநர் அமித்தும் ஒருவர். அமித் கூறிய கதை விக்ரமுக்கு பிடித்துவிடவே, கைவிடப்பட்ட 'கரிகாலன்' படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை பண்ண திட்டமிட்டு இருக்கிறார்.

இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார். அமித் மற்றும் ஜிப்ரான் இருவருமே அண்ணன் - தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x