Last Updated : 13 Jun, 2015 02:34 PM

 

Published : 13 Jun 2015 02:34 PM
Last Updated : 13 Jun 2015 02:34 PM

அமீர் இயக்கத்தில் சிம்பு

செல்வராகவன் படத்தைத் தொடர்ந்து அமீர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு.

'வாலு', 'இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீடடுக்கு தயாராகி வருகிறது.

'வாலு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை இம்மாத கடைசியிலும் அதனைத் தொடர்ந்து 'இது நம்ம ஆளு' இறுதிப் பணிகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு.

இதற்கிடையில், கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் 'கான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்விரண்டு படங்களையும் தொடர்ந்து அமீர் இயக்கவிருக்கும் படத்தை நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இப்படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' தயாரிப்பாளர் தயாரிக்கவிருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் சிம்புவுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x