Published : 07 Jun 2015 03:47 PM
Last Updated : 07 Jun 2015 03:47 PM
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து 'அமர் ஹெய்ன்' என்ற நேரடி இந்திப் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சம்பத் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கமல் நடித்து தயாரிக்கும் இப்படத்தை அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நேரடி இந்திப் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். 'அமர் ஹெய்ன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படம் ஏற்கனவே 'தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பில் தமிழில் தயாராக இருந்த படமாம்.
இக்கதையை எழுதும் போதே சைஃப் அலிகானை மனதில் வைத்து தான் எழுதியதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
இப்படம் முழுக்க அரசியல், நிதி, நிழலுகம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை 'தூங்காவனம்' முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்.
டெல்லி, துபாய், ஜோர்டன், லண்டன், மும்பை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடத்த இருக்கும் இப்படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடித்து இயக்கவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT