Published : 29 May 2015 09:39 AM
Last Updated : 29 May 2015 09:39 AM

நடிகர் சங்க கட்டிட விவகாரம்: விஷால் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார் - சரத்குமார் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர் பாக நடிகர் விஷால் தவறான கருத்துகளை தெரிவித்து வருவ தாக ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத்தின் செயற்குழு, பொதுக் குழுவில் முடிவெடுத்தபடி ஒப்பந் தங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக விஷால் மற்றும் சிலரை சிறப்பு செயற் குழுவுக்கு வரவழைத்து விளக்க மளிக்கப்பட்டது. கட்டிடப் பணிகள் தொடங்கப்படாததற்கு காரணம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குதான் என்பது விஷா லுக்கு தெரியும். சங்கக் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று எங்களைப் போலவே ஆர்வமுடன் இருக்கும் விஷாலின் எண்ணத்தை வரவேற்கிறேன்.

தலைவரை எதிர்க்கவில்லை. ஆனால் சங்கக் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று விஷால் அடிக்கடி கூறி வருகிறார். நடிகர் சங்கத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது போல, அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டு, உண் மைக்கு மாறாக விஷால் பேசி வருவது வேதனை அளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது இத்தகைய செயல் களில் விஷால் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x