Last Updated : 27 May, 2015 02:54 PM

 

Published : 27 May 2015 02:54 PM
Last Updated : 27 May 2015 02:54 PM

கான் அப்டேட்: முருக பக்தர் சிம்பு, போலீஸ் அதிகாரி டாப்ஸி

செல்வராகவன் இயக்கத்தில் முருக பக்தராக சிம்புவும், போலீஸ் அதிகாரியாக டாப்ஸியும் நடித்து வருகிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, கத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படக்குழு சார்பில் "படத்தின் தலைப்பு 'கான்' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய காட்சிகள் சிலவற்றை காட்டுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

அதுமட்டுமன்றி, இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடித்து வருகிறார். 'கான்' என்றால் 'காடு' என்று அர்த்தம். போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் தயாராகி வருகிறது" என்று தெரிவித்தார்கள்.

டாப்ஸி, "இரண்டு தமிழ் படங்கள் நடித்து வருகிறேன். குடும்ப பின்னணியில் தயாராகும் படத்தில் கும்பகோணத்தில் இருக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். மற்றொரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

செல்வராகவன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தற்போது கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x