Last Updated : 03 Apr, 2015 03:05 PM

 

Published : 03 Apr 2015 03:05 PM
Last Updated : 03 Apr 2015 03:05 PM

ஏப்.8-ல் சூர்யாவின் 24 படப்பிடிப்பு துவக்கம்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 8ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் 'மாஸ்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து 'மனம்' விக்ரம் குமார் இயக்கவிருக்கும் '24' படத்தில் நடிக்க சூர்யா தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். சமந்தா, சத்யன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

'24' படத்துக்கு ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் கதை மும்பையில் நடப்பது போல இயக்குநர் வடிவமைத்து இருப்பதால், மும்பையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

தொடர்ச்சியாக ஒரு மாதம் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. '24' படத்தை சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி மூலமாக தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x