Last Updated : 06 Apr, 2017 02:44 PM

 

Published : 06 Apr 2017 02:44 PM
Last Updated : 06 Apr 2017 02:44 PM

இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2 படக்குழுவுக்கு தற்காலிக பின்னடைவு

வடிவேலு நாயகனாக நடிப்பில் உருவாகவிருந்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' 2ம் பாகத்தின் படக்குழு தற்காலிமாகப் பின்னடைவை சந்தித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. சபேஷ் - முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. தற்போது ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இதனை லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கமும் உறுதிப்படுத்தினார்.

இரண்டாம் பாகத்தில் வடிவேலு நாயகனகாக நடிக்க சிம்புதேவனே இயக்க இருக்கிறார். வடிவேலுவுடன் நடிக்கவிருந்த நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கவிருந்தது. ஆனால், திடீரென்று வடிவேலு சம்பளத்தை அதிகப்படுத்தவே மீண்டும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

"வடிவேலுவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்படும்" என்று படக்குழுவினரும் உறுதிப்படுத்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x