Published : 01 Jul 2015 02:36 PM
Last Updated : 01 Jul 2015 02:36 PM

பிரம்மாண்டமாக தயாராகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தன. ஆனால் படக்குழு சார்பில் எதையுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமால இருந்தார்கள்.

இந்நிலையில், sivasnext என்ற ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் யார் என்றும், 11 மணிக்கு படக்குழுவினர் பற்றிய தகவல்களையும் வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள்.

அதன்படி முதலில் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருப்பதாக முதலில் அறிவித்தார்கள்.

தொடர்ந்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட், கலை இயக்குநராக முத்துராஜ், படத்தொகுப்புக்கு ஆண்டனி ரூபன், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, ஆடை வடிவமைப்பாளராக அனு பார்த்தசாரதி என படக்குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x