Published : 20 May 2017 01:49 PM
Last Updated : 20 May 2017 01:49 PM
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ஜுன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
தணிக்கை பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து மே மாதத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், 'பாகுபலி 2' படத்தின் அசுரத்தனமான வெற்றி மற்றும் பல்வேறு படங்களின் வெளியீட்டால் தற்போது ஜுன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜுன் முதல் வாரத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் செல்வராகவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT