Published : 06 Apr 2025 07:22 AM
Last Updated : 06 Apr 2025 07:22 AM

‘பெப்சி’க்கு எதிராக புதிய அமைப்பு: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்​கும் தென்​னிந்​திய திரைப்பட தொழிலா​ளர்​கள் சம்​மேளன​மான ‘பெப்​சி’க்கும் கடந்த சில மாதங்​களாக மோதல் போக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து பெப்சி அமைப்​பு, நடப்பு தயாரிப்​பாளர் சங்​கத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்​நிலை​யில் ‘பெப்​சி’ க்கு எதி​ராக புதிய திரைப்​படத் தொழிலா​ளர்​கள் அமைப்​பை, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கம் தொடங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தயாரிப்​பாளர் சங்​கத் தலை​வர் முரளி என் ராம​சாமி, பொதுச் செய​லா​ளர்​கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் கூறிய​தாவது: தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று நடந்​தது. எங்​கள் சங்​க​மும் பெப்சி அமைப்​பும் சுமார் 50 வருடங்​களாகத் தொழில் ஒத்​துழைப்​பில் ஈடு​பட்டு வந்​தோம். சில காரணங்​களால் அவர்​கள் எங்​கள் சங்​கத்​துக்கு ஒத்​துழைப்பு தரு​வ​தில்லை என்று கூறி நடப்​புத் தயாரிப்பு சங்​கத்​துடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளார்​கள். நாங்​கள் பலமுறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் அவர்​கள் அதற்கு உடன்​பட​வில்​லை.

இதனால் புதிய தொழிலா​ளர் அமைப்பை உரு​வாக்​கும் சூழலுக்கு பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி எங்​களைத் தள்​ளி​யுள்​ளார். அதனால் ‘தமிழ்​நாடு திரைப்பட தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்​பு’ என்ற புதிய அமைப்பை உரு​வாக்க இந்த செயற்​குழு​வில் முடிவு எடுத்​துள்​ளோம். மேலும், சினிமா துறை​யில் அனை​வரும் தற்​காலிக ஒப்​பந்த தொழிலா​ளர்​களாகத் தான் இருக்​கிறார்​கள். ஆனால், அவர்​களுக்கு பி.எப் உள்​ளிட்ட வசதி​களைப் பெறு​வதற்​காக, ‘பெஸ்​ரா’ என்ற இன்​னொரு அமைப்​பைத் தொடங்​கு​கிறது, பெப்​சி. தயாரிப்​பாளர்​கள், தொழிலா​ளர்​களுக்கு அவ்​வளவு செய்​தும் இப்​படி ஒரு அமைப்பை அவர்​கள் தொடங்​கு​வதை நாங்​கள் கண்​டிக்​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

பணிபுரிய மாட்டோம்: ஆர்.கே.செல்வமணி - தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு குறித்து ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும் என்று எப்போதும் சொல்லி வருகிறோம். நடப்பு தயாரிப் பாளர்கள் சங்கம் தொடங்கிய பிறகு அவர்களுடன் பணிபுரிய வேண்டாம் என்று எங்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுத்தார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அங்கிருந்துதான் பிரச்சினை தொடங்கியது. இப்போது, ‘பெப்சி’க்கு எதிரான அமைப்பை தொடங்கியுள்ள அவர்களுடன் பணிபுரிய மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x