Published : 30 Mar 2025 07:12 PM
Last Updated : 30 Mar 2025 07:12 PM
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது.
‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் முன்னரே திட்டமிடப்பட்ட ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பினை காரைக்குடியில் சத்தமின்றி தொடங்கியுள்ளார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
‘வேட்டுவம்’ படத்தின் நாயகனாக தினேஷ் நடித்து வருகிறார். இதில் வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார். இவர்களுடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும். இப்படத்தினை குறுகிய கால தயாரிப்பாக முடிக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தப் படத்தினை முடித்துவிட்டு, நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்திப் படத்தினை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் பிரச்சினையால் அப்படம் தொடங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment