Published : 24 Mar 2025 01:48 PM
Last Updated : 24 Mar 2025 01:48 PM

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த நிலையில் இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, மனமுவந்து பிரிவதாக இருவரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

முன்னதாக நீதிமன்றத்துக்கு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஒரே காரில் வந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x