Published : 23 Mar 2025 11:15 AM
Last Updated : 23 Mar 2025 11:15 AM
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பது ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் படத்தினை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். மேலும் அவர் இயக்கத்தில் உருவாகும் வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளார். இப்படங்கள் தவிர்த்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரது படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அஜித்திடம் தொலைபேசி வாயிலாக கதையொன்றை தனுஷ் கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இதனை தனுஷ் தரப்பு மறுத்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இதனை உறுதி செய்திருக்கிறார். அஜித் - தனுஷ் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
விரைவில் அஜித்தை நேரில் சந்தித்து முழுமையான கதையினை கூற இருக்கிறார் தனுஷ். இதற்காக படப்பிடிப்புக்கு இடையே கதையினை எழுதி வருகிறார். அஜித் சென்னை திரும்பியவுடன் இந்தச் சந்திப்பு நடக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment